கொரோனா விதிமீறல்: கத்தாரில் நேற்று 71 பேர் மீது நடவடிக்கை.!

Ministry intensifies inspection
Pic: Abdul Basit/The Peninsula

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கத்தாரில் நேற்று (12-12-2020) முகக்கவசம் அணிய தவறியதற்காக 66 பேரை உள்துறை அமைச்சகம் (MoI) பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளது.

கத்தாரில் Karwa டாக்சிகளில் Google Pay மற்றும் Apple Pay சேவைகள் அறிமுகம்.!

கத்தாரில், ஒரு வாகனத்தில் (குடும்ப உறுப்பினர்களை தவிர்த்து) ஓட்டுநர் உட்பட 4 நபர்கள் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த உத்தரவை மீறியதற்காக 5 நபர்கள் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது ‌

கத்தாரில் தற்போது வரை முகக்கவசம் அணிய தவறிய 2,860 பேர் மற்றும் வாகனத்தில் நான்கு பேருக்கு மேல் சென்றதற்காக 242 நபர்களையும் அமைச்சகம் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளது.

கத்தாரில் 5-வது அறுவடை திருவிழா இந்த மாதம் தொடக்கம்.!

மேலும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு  அதிகாரிகள் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…