கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் இருவர் கைது‌.!

Qatar arrests seven more

கத்தாரில், வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக‌ மேலும் இரண்டு நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக கத்தார் செய்தி நிறுவனம் நேற்று (15-10-2020) ட்வீட் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் (COVID-19) மக்களிடையே பரவுவதை கட்டுப்படுத்த கத்தார் முயற்சித்து வரும் வேளையில், அரசாங்கத்தின் உத்தரவுகளை சிலர் மீறி, பொது சுகாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் மழைக்காலம் தொடக்கம்; இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!

கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவரும் தங்கள் பாதுகாப்பு மற்றும் பிறரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சகம் குறிப்பிட்டுள்ள விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு  அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர்கள்:

  • Mazen Kamal Mohammed Hassan.
  • Abdulaziz Mohammed Abdulrahman Al Sayed Mohammed Al Hashimi

இதற்கு முன்னர், கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தார் ஹமாத் விமான நிலையத்தில் போதை பொருள்கள் பறிமுதல்; ஒருவர் கைது.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…