பிரதமர் மோடி, அமித்ஷாவிற்கு கொலை மிரட்டல் கத்தார் ஓட்டுனர் கைது..!

கர்நாடகத்தைச் சேர்ந்த அன்வர் என்பவர் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றிற்கு எதிராக சமூக வலைத்தளங்களில்
கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

மேலும், இந்த விவகாரங்கள் தொடர்பாக வாட்ஸ்அப்பில் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் அது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக கர்நாடக மாநிலம் விட்டல் காவல் நிலையத்தில் யதீஷ் என்பவர் புகார் அளித்திருந்தார்.

புகாரில், அன்வர் தனது பதிவுகளில்
CAA, NRC ஆகியவற்றால் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள் என்றால் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கொல்வேன் என்று கூறியதாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக, விசாரணை நடத்திய வந்த போலீசார் அன்வர் தனது சொந்த கிராமத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தையடுத்து, அங்கு சென்று அவரை கைது செய்துள்ளனர். மேலும் அன்வர் கத்தார் நாட்டில் டிரைவராக உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.