கத்தார் அமீர், குவைத் அமீருடன் தொலைபேசி உரையாடல்.!

கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள் மற்றும் இரு நாடுகளுக்கிடையேயான உறுதியான சகோதர உறவுகள் பற்றி கலந்துரையாட கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி அவர்கள் குவைத் அமீர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்களுடன் நேற்று (03-04-2020) தொலைபேசி உரையாடல் ஒன்றை நடத்தினார்.

இந்த உரையாடலில், இரு தலைவர்களுக்கும் இரு சகோதர மக்களுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளையும், புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான வழிகளையும் ஆய்வு செய்தனர்.

கத்தார் அமீரும், குவைத் அமீரும் COVID-19 க்கு எதிரான போராட்டம் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்தும், இது தொடர்பாக இரு நாடுகளும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பேசினர்.

மேலும், நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புகள் பற்றியும், பொதுவான அக்கறை கொண்ட சில பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகளும் இந்த அழைப்பின் போது கலந்துரையாடப்பட்டன.