கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் நிபந்தனைகளை மீறியதற்காக மேலும் 4 நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் (MoPH) நேற்று (29-08-2020) அறிவித்துள்ளது.
வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தங்கள் பாதுகாப்பு மற்றும் பிறரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சகம் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர்கள்:
- Ali Abdullah Salem Al Malamqa Al Hajri.
- Mubarak Hamad Mubarak Salem Al Obaidi.
- Rashid Abdullah Rashid Issa Al Suwaidi.
- Mohamed Bilal Jumaa Bilal Al Muraikhi.
கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் நிபந்தனைகளை மீறியதற்காக கடந்த இரண்டு நாட்களில் 10 நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The competent authorities on Saturday arrested four people who violated the requirements of the home quarantine, they committed to following, which they are legally accountable for, in accordance with the procedures of the health authorities in the country. #QNA
— Qatar News Agency (@QNAEnglish) August 29, 2020
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…