கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், கத்தாரில் இன்று (11-02-2021) முகக்கவசம் அணிய தவறிய 786 பேரை உள்துறை அமைச்சகம் (MoI) பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளது.
மேலும், ஒரு வாகனத்தில் டிரைவர் உட்பட நான்கு பேருக்கு மேல் செல்ல அனுமதியில்லை என்று உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
இந்தியாவில் இருந்து கத்தாருக்கு கடத்த முயன்ற ரூ.5 கோடி மதிப்புள்ள கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்.!
உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவை மீறி செயல்பட்ட காரணத்தால் 25 பேர் மீதும் அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கத்தாரில் இதுவரை முகக்கவசம் அணிய தவறியதற்காக 11,793 பேர் மற்றும் வாகனத்தில் நான்கு பேருக்கு மேல் சென்றதற்காக 369 நபர்களையும் அமைச்சகம் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
கொரோனா விதிமீறல்; கத்தாரில் மூன்று கடைகளை மூடியது அமைச்சகம்.!
In line with the cabinet decision based on Law No. 17 of 1990 regarding infectious diseases, 786 people were referred to the Public Prosecution for not wearing masks and 25 for violating the limit of passengers in a car. #IwearAMask #Coronavirus #MoIQatar #Qatar #COVID19 pic.twitter.com/l2oyPsjwMT
— Ministry of Interior (@MOI_QatarEn) February 11, 2021