கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் மீட்கும் “வந்தே பாரத்” திட்டத்தின் அடிப்படையில், கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கு நேற்று (31-05-2020) 14வது விமானம் புறப்பட்டது.
கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஸ்ரீநகர்/அமிர்தசரஸ் (Srinagar/Amritsar) நகருக்கு 154 பயணிகள் மற்றும் 3 குழந்தைகளுடன் ஏர் இந்தியா (AI-972) விமானம் புறப்பட்டு சென்றது.
AI-972 took off a short while ago from HIA for Srinagar/Amritsar with 154 passengers, including 3 infants. This was the 14th flight from Doha under #VandeBharat, bringing the total number of repatriated passengers to 2322, plus 64 infants. @DrSJaishankar @MOS_MEA @MEAIndia pic.twitter.com/Hs1Vqg1sV5
— India in Qatar (@IndEmbDoha) May 31, 2020
கத்தாரிலிருந்து இதுவரை நாடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 64 குழந்தைகள் மற்றும் 2,322 நபர்களை கொண்டுள்ளதாக கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.