கொரோனா வைரஸ் காரணமாக
வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் “வந்தே பாரத்” திட்டத்தின் மூலம் கத்தாரில் இருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு இன்று (27-06-2020) மேலும் ஒரு விமானம் புறப்பட்டது. இது கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் 48வது விமானம் ஆகும்.
கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு 176 பயணிகள் மற்றும் ஒரு கைக்குழந்தையுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX-1576 விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.
மேலும், கத்தாரில் இருந்து இதுவரை
நாடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 224 குழந்தைகள் மற்றும் 8,351 நபர்களை கொண்டுள்ளதாக கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
IX- 1576 took off from HIA for Trivandrum a short while ago with 176 passengers and an infant. This was the 48th flight from Doha under #Vandebharat, bringing the total number of repatriated passengers to 8351, plus 224 infants. @DrSJaishankar @MOS_MEA @MEAIndia pic.twitter.com/FFYWa1vLfa
— India in Qatar (@IndEmbDoha) June 27, 2020