கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்று மேலும் ஒருவர் பலி.!

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட மேலும் ஒருவரின் மரணத்தை பொது சுகாதார அமைச்சகம் இன்று (22-06-2020) பதிவு செய்துள்ளது. கத்தாரில் இதுவரை மொத்தம் 99 பேர் கொரோனா தொற்றுக்கு மரணமடைந்துள்ளனர்.

இன்று பதிவு செய்யப்பட்ட புதிய மரணம் 60 வயதுடைய நபர் என்றும், இவர் தேவையான மருத்துவ சேவையைப் பெற்றுவந்தவர் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், பொது சுகாதார அமைச்சகம் இறந்த நோயாளியின் குடும்பத்திற்கு தனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளது.