கத்தாரில், வீட்டு தனிமைப்படுத்தல் நிபந்தனைகளை மீறிய 10 பேர் கைது.!

Competent arrest four people for violating home quarantine conditions

கத்தாரில், வீட்டு தனிமைப்படுத்தல் நிபந்தனைகளை மீறிய மேலும் 10 நபர்களை கத்தார் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் (MoPH) நேற்று (27.03.2020) தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரும் கத்தார் நாட்டவர்கள் என்றும், கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் நிபந்தனைகளுக்கு எதிராக செயல்படும் அனைத்து நபர்களையும் கண்காணித்து கைது செய்வதில், அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் நிபந்தனைகள் மீறதற்காக இதுவரை 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.