பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீறியதற்காக 10 பேரை உள்துறை அமைச்சகத்தின் (MoI) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தெற்கு கத்தாரின் மணல் திட்டு பகுதியில், குழு ஒன்று திரண்டு வருவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து, பத்து பேரை கைது செய்துள்ளதாக MOI தனது ட்வீட்டர் பதிவில் கூறியுள்ளது.
மேலும், தங்களையும் சமூகத்தையும் பாதுகாப்பதற்காக பொது இடங்களில் கூட்டங்களைத் தடுக்கும் முடிவை கண்டிப்பாக பின்பற்றுமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.