கொரோனா வைரஸ்; கத்தாரில் புதிய 10 வழக்குகள் உறுதி..!

10 new cases of Covid-19 in Qatar.

கத்தாரில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 10 புதிய வழக்குகளை பொது சுகாதார அமைச்சகம் (MoPH) நேற்று (18-03-2020) அறிவித்துள்ளது. இதன்‌ மூலம் நாட்டின் கொரோனா வைரஸால் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 452ஆக உயர்ந்துள்ளது.

இந்த, புதிய வழக்குகளில், பெரும்பாலானவை தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் தொடர்பானவை என்றும், சுவிட்சர்லாந்தில் இருந்து திரும்பிய கத்தார் குடிமகன் ஒருவர்க்கும் இந்த புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வழக்குகள் சுகாதார தனிமைப்படுத்தலுக்கு, அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளன மற்றும் தேவையான மருத்துவ சேவையைப் பெறுகின்றன எனவும் கூறியுள்ளது.

கத்தாரில், உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளுடன் தொடர்பு கொண்ட அனைவருக்கும் தேவையான சுகாதார சோதனைகளை பொது சுகாதார அமைச்சின் திறமையான அதிகாரிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதுவரை 8,873 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.