COVID-19 : கத்தாரில் 6 பேர் வீடு திரும்பினர்.!

கத்தார் நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றால் சிகிச்சை பெற்று வந்தவர்களில், 6 பேர் வீடு திரும்பியுள்ளதாக நெருக்கடி மேலாண்மைக்கான உச்சக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஹெச்.இ லோல்வாஹ் பின்த் ரஷீத் பின் முகமது அல் காதர் (HE Lolwah bint Rashid bin Mohammed Al Khater) நேற்று (19-03-2020) செய்தியாளர் சந்திப்பில்‌ கூறினார்.

இதற்குமுன், வீடு திரும்பிய 4 பேருடன் சேர்த்து மொத்தமாக தற்போது, 10 பேர் வீடு திரும்பியுள்ளனர். அவர்களில், 6 பேர் கத்தார் குடிமக்கள் என்றும், 4 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 9,460 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.