COVID-19 : கத்தாரில் மொத்த எண்ணிக்கை 537ஆக உயர்வு.!

கத்தாரில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான உறுதிப்படுத்தப்பட்ட 11 புதிய வழக்குகளை பொது சுகாதார அமைச்சகம் நேற்று (25-03-2020) அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 537ஆக உயர்ந்துள்ளது.

இந்த புதிய வழக்குகள் சமீபத்தில், கத்தாருக்குள் வந்த பயணிகளுடன் தொடர்புடையவை என்றும், மற்றவர்கள் கத்தார் குடிமக்களின் ஐந்து வழக்குகள் உட்பட பாதிக்கப்பட்ட வழக்குகளுடன் தொடர்பு கொண்ட நபர்களைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.

மேலும், புதிய வழக்குகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் தேவையான மருத்துவ சேவையைப் பெறுகின்றன எனவும் கூறியுள்ளது.

கத்தாரில், கொரோனா வைரஸிற்கு இதுவரை மொத்தம் 12,258 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.