COVID-19 : கத்தாரில் புதிய 13 வழக்குகள் உறுதி.!

கத்தாரில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 13 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் (MoPH) இன்று (22-03-2020) அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 494ஆக உயர்ந்துள்ளது.

புதிய வழக்குகளில், பெரும்பாலானவை சமீபத்தில் கத்தாருக்குள் வந்த பயணிகளுடன் தொடர்புடையவை என்றும் மேலும், கத்தார் குடிமக்களின் ஐந்து வழக்குகள் அடங்கும் என்றும், மற்ற வழக்குகள் வெளிநாட்டவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட புதிய வழக்குகள் முழுமையான சுகாதார தனிமைப்படுத்தலுக்கு, அனுமதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 10,857 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.