வந்தே பாரத் மிஷன் 4-ம் கட்டம்; ஓமன் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு செல்லும் விமானங்களின் பட்டியல் வெளியீடு.!

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்டமாக ஓமன் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு செல்லும் விமானங்களின் பட்டியலை ஓமன் நாட்டிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஓமன் நாட்டிலிருந்து நான்காம் கட்டத்தில் மொத்தம் 16 விமானங்கள் ஓமனில் இருக்கும் இந்தியர்களை அழைத்து கொண்டு தாயகத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 16 விமானங்களில் கேரளாவிற்கு 11 விமானங்கள், டெல்லிக்கு ஒரு விமானம், மங்களூர் நகரிற்கு ஒரு விமானம், ஹைதராபாத்திற்கு ஒரு விமானம், மும்பைக்கு ஒரு விமானம் மற்றும் சென்னைக்கு ஒரு விமானமும் செல்லவிருக்கின்றன.

சென்னைக்கு வரும் ஜூலை மாதம் 2ஆம் தேதி ஓமனிலிருக்கும் தமிழர்களை அழைத்து கொண்டு ஒரு விமானம் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.