கத்தாரில் கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட 17 புதிய வழக்குகளை பொது சுகாதார அமைச்சகம் (MoPH) இன்று (14-03-2020) வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வைரஸ் பாதிப்புக்குள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 337ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான புதிய வழக்குகள் தனிமைப்படுத்தப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களிடையே முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட வழக்குகளுடன் தொடர்புடையவை என கூறப்பட்டுள்ளது. மேலும், கத்தாரில் கொரோனா வைரஸ் சோதனைக்கு இதுவரை 5309 பேர் உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
கத்தார் பொது சுகாதார அமைச்சகம் தொடர்ந்து, தேடல் துறைகளை விரிவுப்படுத்துவதாகவும், உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளுடன் தொடர்பு கொண்ட அனைவருக்கும் தேவையான சோதனைகளை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளது.