கத்தாரில், உணவுப்பொருட்களின் காலாவதி தேதியை சட்டவிரோதமாக மாற்றியமைத்ததற்காக 19 பேரை உள்துறை அமைச்சகம் கைது செய்துள்ளது.
கத்தார் வடக்கு பாதுகாப்பு துறை அதிகாரிகள் Umm Abiriya பகுதியில், அரபு மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 19 நபர்களை கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளது.
மேலும், இவர்களிடமிருந்து காலவதியான பொருட்களின் தேதிகளை மாற்ற பயன்படுத்தப்படும் சாதனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், இவர்கள் அனைவரும் உரிய சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.