கத்தாரில், வீட்டு தனிமைப்படுத்தல் நிபந்தனைகளை மீறியதற்காக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வீட்டு தனிமைப்படுத்தல் நிபந்தனைகளை மீறிய, இரண்டு நபர்களை அதிகாரிகள் நேற்று (23-03-2020) கைது செய்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் (MoPH) தெரிவித்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் கத்தார் நாட்டவர்களாவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.