கத்தாரில் இருந்து தமிழகத்திற்கு 176 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது.!

Pic : Twitter/ India In Qatar

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் மீட்கும் “வந்தே பாரத்” திட்டத்தின் அடிப்படையில், கத்தாரில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX-1676 விமானம் இன்று (11-06-2020) புறப்பட்டது.

கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு
176 பயணிகள் மற்றும் 3 குழந்தைகளுடன் இந்த விமானமானது புறப்பட்டு சென்றதுள்ளது.

மேலும், கத்தாரில் இருந்து இதுவரை நாடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 120 குழந்தைகள் மற்றும் 4,036 நபர்களை கொண்டுள்ளதாக கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.