COVID-19 : கத்தாரில் இதுவரை 37 பேர் குணமடைந்து உள்ளனர்.!

கத்தாரில், கொரோனா வைரஸினால் (COVID-19) பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் பூரண குணமடைந்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் (MoPH) நேற்று (23-03-2020) அறிவித்துள்ளது.

மேலும், நான்கு நோயாளிகளும் கொரோனா வைரஸ் நோய் தொற்றில் இருந்து, மீண்டு நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37ஐ எட்டியுள்ளது.

கத்தாரில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மொத்தம் 11354 சோதனை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.