ஈரானில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; கத்தாரில் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.!

Pic: Qatar Weather/Twitter

கத்தார் நில அதிர்வு வலையமைப்பு (Qatar Seismic Network) ஈரானின் தென்மேற்கு பகுதியில், நேற்று (09-06-2020) கத்தார் நேரப்படி, இரவு 8.18 மணிக்கு 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை பதிவு செய்துள்ளது.

செவ்வாய் அன்று ஃபார்ஸ் மாகாணத்தில் (Fars province) 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஈரான் செய்தி நிறுவனமான IRNA உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலநடுக்கம் கத்தாரின் கிழக்கு கடற்கரையில் உணரப்பட்டது என்றும், பல அண்டை நாடுகளில் இது மையமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, என்று கத்தார் வானிலை ஆய்வு துறை ட்வீட் செய்துள்ளது.

Source: The Peninsula Qatar