COVID19 : கத்தாரில் மொத்த எண்ணிக்கை 500ஐ தாண்டியது..!

India reports two new cases of COVID-19
7 new coronavirus cases in Qatar taking total to 501.

கத்தார் நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான புதிய உறுதிப்படுத்தப்பட்ட ஏழு வழக்குகளை பொது சுகாதார அமைச்சகம் (MoPH) நேற்று (23-03-2020) அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டின், கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 501ஆக அதிகரித்துள்ளது.

இந்த புதிய வழக்குகள் சமீபத்தில், கத்தாருக்குள் வந்த பயணிகள் என்றும் இதில், இரண்டு வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் இரண்டு கத்தார் குடிமக்கள் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ள நபர்கள், சரியான தனிமையில் இருக்கிறார்கள் எனவும், அவர்கள தேவையான மருத்துவ சேவைகளைப் பெறுகிறார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மொத்தம் 11354 சோதனை செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.