கத்தாரில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட மேலும் ஒருவரின் மரணத்தை பொது சுகாதார அமைச்சகம் இன்று (16-05-2020) பதிவு செய்துள்ளது. கத்தாரில் இதுவரை மொத்தம் 15 பேர் கொரோனா தொற்றுக்கு மரணமடைந்துள்ளனர்.
இறந்தவர், 74 வயதான கத்தார் குடியிருப்பாளர் என்றும், இவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தேவையான மருத்துவ சேவையைப் பெற்று வந்தவர் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், பொது சுகாதார அமைச்சகம் இறந்தவரின் குடும்பத்திற்கு தனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளது.
Source: TPQ