COVID-19 : கத்தாரில் புதிய 8 வழக்குகள் உறுதி.!

கத்தாரில் நேற்று (19-03-2020) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 8 புதிய வழக்குகளை கத்தார் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 460ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸால் உறுதிப்படுத்தப்பட்ட 8 புதிய வழக்குகளில், ஆறு வெளிநாட்டவர்கள் மற்றும் இரண்டு கத்தார் நாட்டவர்கள் என்றும், இங்கிலாந்து மற்றும் இத்தாலியில் இருந்து திரும்பியவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்றும், கத்தாரில் கொரோனா வைரஸிற்கு இதுவரை 9,460 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.