கத்தார், ஓமன் நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு கூடுதல் விமான சேவைகள் தேவை; தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை.!

கத்தார் மற்றும் ஓமன் நாடுகளில் இருந்து ‌தமிழகத்திற்கு கூடுதல் விமான சேவைகள் வேண்டும் என தமிழக அரசிற்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசு தற்போது வெளியிட்டிருக்கும் வந்தே பாரத் திட்டத்திலான விமான சேவையில் கத்தாரிலிருந்து ஒரு விமான சேவை கூட தமிழகத்திற்கு வழங்கப்படவில்லை என்பதாக‌ அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுக்குறித்து தமிழக அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் சிறப்பு அதிகாரியான திருவாட்டி. மைதிலி IAS அவர்களை தொடர்பு கொண்டு தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியுள்ளார்.

அதில், கத்தாரில் தவிக்கும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாக கூறிய அவர், அங்கிருக்கும் தமிழர்கள் தாயகம் திரும்ப வசதியாக கூடுதல் விமான சேவைகளை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், அதேபோல் ஓமன் நாட்டில் தவிக்கும் தமிழர்களும் தாங்கள் தாயகம் திரும்ப கூடுதல் விமான சேவைகளை எதிர்பார்ப்பதாக கூறிய அவர், அதற்கும் உரிய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் தமிழர்கள் தாங்கள் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் விரைவாக தாயகம் திரும்ப துடிப்பதையும் எடுத்துக்கூறியுள்ளார். இதுக்குறித்து உரிய முயற்சிகளை மேற்கொள்வதாக திருவாட்டி. மைதிலி IAS அவர்கள் கூறியுள்ளதாக தமிமுன் அன்சாரி
தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.