கத்தாரில் அல் கோர் கார்னிவல் கடந்த (23-01-2021) சனிக்கிழமை முதல் Al Bayt ஸ்டேடியம் பூங்காவில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
அல் கோர் கார்னிவல் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கவிருந்த நிலையில், எதிர்பாராத வானிலை நிலைமை காரணமாக திறப்பு சனிக்கிழமை அன்று ஒத்திவைக்கப்பட்டது.
இந்த திருவிழா வருகின்ற பிப்ரவரி 6ம் தேதி வரை மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தாரில் வண்ணமயமான மலர் திருவிழா துவக்கம்.!
இந்த திருவிழாவிற்கு நுழைவு கட்டணம் இலவசம், ஆனால், சவாரிகளுக்கு QR 10 ரியால் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு QR100 ரியால் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அல் Bayt ஸ்டேடியம் பூங்காவில் நடைபெற்று வரும் அல் கோர் கார்னிவல் திருவிழா நேற்று (30-01-2021) ஒருநாள் மட்டும் கிருமி நீக்கம் (sterilize) செய்வதற்காக மூடப்பட்டிருந்தது.
அனைவரின் பாதுகாப்பிற்காக ஜனவரி 30 சனிக்கிழமையன்று இடத்தை கிருமி நீக்கம் செய்ய கார்னிவல் மேலாண்மை முடிவு எடுத்துள்ளது என்றும், ஜனவரி 31 ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்காக அல் கோர் கார்னிவல் திருவிழா மீண்டும் தொடங்கும் என்றும் ட்வீட்டரில் தெரிவித்துள்ளது.
ஏமன் நாட்டிலுள்ள ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் கத்தார் தன்னார்வ அமைப்பு.!
نظراً للإقبال الكبير في كرنفال الخور وحرصاً على سلامة الجميع، قررت إدارة الكرنفال تعقيم الحديقة يوم السبت الموافق 30 يناير على أن يعاود فتح الكرنفال أمام الجمهور يوم الأحد الموافق 31 يناير #كرنفال_الخور pic.twitter.com/xEuhylHnKU
— carnivalalkhor (@carnivalalkhor) January 30, 2021