கத்தாரில் அல் மீரா கிளைகளில் ‌நுழைய முகக்கவசம் கட்டாயம்..!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஏற்ப, கத்தாரில் உள்ள அல்-மீரா (Al-Meera) தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில், அல் மீரா கிளைகளில் நுழையும் அனைத்து வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், முகக்கவசம் இல்லாமல் வருபவர்களை அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளது.

இந்த நடைமுறையானது, வருகின்ற 24-04-2020 (வெள்ளிக்கிழமை) முதல் பின்பற்றப்பட உள்ளது என்றும், தற்போதைய கொரோனா வைரஸ் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அல் மீரா நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.