கத்தாரில், வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக மேலும் 3 நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக கத்தார் செய்தி நிறுவனம் நேற்று (06-10-2020) ட்வீட் செய்துள்ளது.
கொரோனா வைரஸ் (COVID-19) மக்களிடையே பரவுவதை கட்டுப்படுத்த கத்தார் முயற்சித்து வரும் வேளையில், அரசாங்கத்தின் உத்தரவுகளை சிலர் மீறி, பொது சுகாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதாக கூறப்பட்டுள்ளது.
கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவரும் தங்கள் பாதுகாப்பு மற்றும் பிறரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சகம் குறிப்பிட்டுள்ள விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக நேற்று முன்தினம் (05-10-2020) இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர்கள்:
- Hassan Saad Badi Al Jafali Al Nuaimi.
- Mahmoud Badea Mukhtar Abdul Kamel.
- Salah Al Sayyed Bedair Al Dersi.
The competent authorities arrested today 3 people who violated requirements of home quarantine, they committed to following, which they are legally accountable for, in accordance with the procedures of health authorities in the country and will be referred to prosecution. #QNA
— Qatar News Agency (@QNAEnglish) October 6, 2020
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…