கத்தார் நாட்டில், (14-02-2020) அன்று போக்குவரத்து இயக்குநரகம் ஒத்துழைப்புடன், சிவில் பாதுகாப்பு பொது இயக்குநரகம் சார்பில், முகாம்களில் (Camps) பாதுகாப்பு நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது.
இந்த பிரச்சாரத்தில் போது, பாதுகாப்பான முகாம் பருவத்திற்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்துப்பட்டது. மேலும், இதில் பல்வேறு வகையான தீயணைப்பு கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும், முகாம் பருவத்தில் மின் இணைப்புகளை பாதுகாப்பாக கையாளுதல் மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் குறித்தும், பொதுமக்களுக்கு போதுமான விளக்கங்கள் வழங்கப்பட்டன.