சவுதியில் இன்று முதல் திறக்கப்படும் மசூதிகள்; வழிப்பாட்டளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகள்.!

சவுதி அரேபியாவில் புனித நகரான மக்காவில் உள்ள மசூதிகள் தவிர்த்து, இன்று (31-05-2020) முதல் மசூதிகள் திறக்கப்பட உள்ள நிலையில் 90,000 மசூதிகள் வரை தூய்மைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைத்து வழிபாட்டாளர்களும் தங்கள் பாதுகாப்பிற்காக தடுப்பு நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று அமைச்சகம் தீவிரமான ஊடக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, தொழுகைக்கு முன்பு செய்யப்படும் உடல் சுத்தத்தை வீட்டிலேயே செய்தல், வழிபாட்டுத்தலங்களிலிருந்து திரும்புவதற்கு முன்பும் தங்களின் வீட்டிற்கு சென்ற பின்பும் கைகளை நன்றாக கழுவுதல் மற்றும் சானிட்டைஸர்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல அறிவுறுத்தல்களை வழிபட்டாளர்களுக்கு அமைச்சகம் வழங்கியுள்ளது.

முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் தங்கள் பிரார்த்தனைகளை வீட்டிலேயே செய்ய
அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மேலும், புனித குர்ஆனை மொபைல் போன் மூலம்
ஆன்லைனிலோ அல்லது தனிப்பட்ட குர்ஆன் நகல் மூலமாகவோ படிக்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல்
மசூதிகளில் பிரார்த்தனை செய்ய வரும்
வழிபட்டாளர்கள் தங்களின் தனிப்பட்ட
பாயை (mat) கொண்டு வருவதும் மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் பிரார்த்தனையின் போது, ஒருவருக்கொருவர் இடையில் இரண்டு மீட்டர் இடைவெளியை பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் மசூதிகளுக்கு வருவது தடைசெய்யப்பட்டுள்ளது. அதனுடன் முக
கவசம் அணிவது மற்றும் பிறரை தொடுவது உள்ளிட்ட உடல் வழி தொடர்புகளை தவிர்க்கவும் வழிபட்டாளர்கள் பின்பற்றவும் அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Source : Khaleej tamil