கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட 243 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குணமடைந்த 226 நோயாளிகள் ஆகியவற்றை பொது சுகாதார அமைச்சகம் இன்று (16-11-2020) பதிவு செய்துள்ளது.
இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 136,028ஆக உள்ளது.
கத்தாரில் COVID-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறிய 130 பேர் மீது நடவடிக்கை.!
கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட மேலும் ஒருவரின் மரணத்தை பொது சுகாதார அமைச்சகம் பதிவு செய்துள்ளது.
தற்போது வரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 235ஆக உயர்ந்துள்ளது.
கத்தாரில் இன்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸிலிருந்து மேலும் 226 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
தற்போது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,33,010ஆக உள்ளது.
பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில்,10,072 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது.
மேலும், கத்தாரில் இதுவரை மொத்தம் 1,053,481 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.
கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் இருவர் கைது.!
آخر مستجدات فيروس كورونا في قطر
Latest update on Coronavirus in Qatar
#سلامتك_هي_سلامتي #YourSafetyIsMySafety pic.twitter.com/XTTP9W1inI— وزارة الصحة العامة (@MOPHQatar) November 16, 2020
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…