கத்தாரில்,1000திற்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று.!

கத்தார் நாட்டில் தொழில் புரிந்து வரும் இலங்கையர்களில், 1,051 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, 43,714 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 9,170 பேர் குணமடைந்துள்ளனர்.

2018ஆம் ஆண்டு நிலவரத்தின்படி,
கத்தாரில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தொழில் புரிந்து வருவதாக அங்குள்ள இலங்கை தூதரகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில், 79 சவீதமானவர்கள் தொழிலாளிகள் மற்றும் வீட்டுப் பணிப்பெண்கள். ஏனைய 21 சவீதமானோர் தொழில் சார்ந்த நிபுணர்கள்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கை திரும்ப ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளர்.

Source: tamilwin