கொரோனா வைரஸ்; கத்தார் நாட்டில் இருந்து இந்தியா திரும்பியவர் பலி..!

இந்திய நாட்டில், கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இதுவரை 341 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கத்தார் நாட்டில் இருந்து பீகார் திரும்பிய 38 வயதுமிக்க நபர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்த நபர், நேற்று (22-03-2020) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

Source : தமிழக ஊடகங்கள்.