கொரோனா விதிமீறல்: கத்தாரில் இன்று ஒரே நாளில் 174 பேர் மீது நடவடிக்கை.!

Covid-19 precautionary measures
Pic: Qatar Tribune

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கத்தாரில் இன்று (24-01- 2021) முகக்கவசம் அணிய தவறிய 174 பேரை உள்துறை அமைச்சகம் (MoI) பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளது.

கத்தாரில் போலீஸ் கல்லூரியின் மூன்றாம் தொகுதி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா: கத்தார் அமீர் பங்கேற்பு.!

கத்தாரில் இதுவரை முகக்கவசம் அணிய தவறியதற்காக 6,856 பேர் மற்றும் வாகனத்தில் நான்கு பேருக்கு மேல் சென்றதற்காக 277 நபர்களையும் அமைச்சகம் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு   பொதுமக்களுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கத்தாரில் தெரு நாய்களின் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்; அமைச்சகம்.!