கத்தார் MoPH இன் பொது சுகாதாரத் துறை இயக்குநர், ஷேக் டாக்டர் முகமது பின் ஹமத் அல் தானி (Sheikh Dr. Mohammed Bin Hamad Al-Thani) அவர்கள் கத்தாரில் கொரோனா வைரஸ் வழக்குகள் குறித்து வீடியோ பதிவு ஒன்றில் பேசினார்.
#قطر #كوفيد١٩ #فيروس_كورونا pic.twitter.com/hatL41aP9l
— وزارة الصحة العامة (@MOPHQatar) March 5, 2020
இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கும் சமூகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். கத்தாரில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் இன்னும் மிகக் குறைவு என்றார்.
மேலும், மார்ச் 4 ஆம் தேதி நிலவரப்படி, கத்தாரில் உறுதிப்படுத்தப்பட்ட 8 வழக்குகள் உள்ளன. இவை அனைத்தும் ஈரானில் இருந்து ஒரே விமானத்தில் வந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விமானத்தில் வந்த அனைவருக்கும் சோதனை செய்யப்படுகிறது. நாங்கள் 8 வழக்குகளை மட்டுமே கண்டறிந்தோம். மற்ற நபர்களின் சோதனையில், வைரஸ் பாதிப்பு எதிர்மறையாக இருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் தொற்று நோய் மையத்தில் அனுமதிக்கப்பட்டு, முழுமையான தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறினார்.