கொரோனா வைரஸ் (COVID-19) காரணமாக கத்தாரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதற்கான திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, இன்று (01-07-2020) முதல் தொழில்துறை பகுதிக்குள் நுழைவு மற்றும் வெளியேறும் (entry and exit) கட்டுப்பாடுகளை ரத்து செய்ய தொழில்துறை பகுதி விவகாரங்களுக்கான நிரந்தர குழு முடிவு செய்துள்ளது.
அதேபோல், அப்பகுதியின் குடியிருப்பாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, முகக்கவசம் அணிவது, பஸ் திறனை பாதியளவு குறைத்தல் மற்றும் EHTERAZ பயன்பாட்டை செயல்படுத்துதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Source: The Peninsula Qatar