COVID-19; கத்தாரில் இன்று ஒரே நாளில் 5 பேர் பலி‌.!

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட மேலும் ஐந்து பேரின் பேரின் மரணத்தை பொது சுகாதார அமைச்சகம் இன்று (09-06-2020) பதிவு செய்துள்ளது. கத்தாரில் இதுவரை மொத்தம் 62 பேர் கொரோனா தொற்றுக்கு மரணமடைந்துள்ளனர்.

இன்று பதிவு செய்யப்பட்ட புதிய மரணங்கள் 65 வயது, 78 வயது, 80 வயது, 74 வயது மற்றும் 53 வயதுடையவர்கள் என்றும், இவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சையில் மருத்துவ சிகிச்சை பெற்றவர்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், பொது சுகாதார அமைச்சகம் இறந்த நோயாளிகளின் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளது.