கத்தார் நாட்டில் இரட்டிப்பு மற்றும் கள்ள பண மோசடியில் (doubling and counterfeit money scam) ஈடுபட்ட ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த, நான்கு பேர் கொண்ட கும்பலை, குற்றவியல் புலனாய்வு பொது இயக்குநரகத்தில் பொருளாதார மற்றும் சைபர் குற்றங்களை எதிர்த்துப் போராடும் துறை (The Economic and Cyber Crimes Combating Department at the General Directorate of Criminal Investigation) கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பணத்தை மோசடி செய்யும் நோக்கில், சில இரசாயன கருவிகளைக் கொண்டு சிகிச்சையளிப்பதன் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கும் மோசடி செயலில் ஈடுபட்ட ஒரு நபர் குறித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கும்பலின் மற்ற உறுப்பினர்களையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை, கத்தார் உள்துறை அமைச்சகம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.