கத்தார் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் பொது இடங்களில் கூட்டங்களைத் தடுக்கும் முடிவை மீறிய நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, கத்தாரில் பொது இடங்களில் ஒன்று கூடுதல் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை மீறியதற்காக நான்கு பேரை உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பதிவில் நேற்று (21-04-2020) கூறியுள்ளது.
கத்தார் Al-Maroona கடற்கரையில், ஒன்று கூடி இருப்பதைக் காட்டும் வீடியோ பரவியதை தொடர்ந்து, அதிகாரிகளால் அந்த தகவல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது.