கத்தாரில் போலீஸ் போன்று நடித்து, பணம் பறிக்க முற்பட்ட கும்பல் கைது.!

Image Credits : Ministry of Interior Qatar

கத்தாரில், பணம் பறிப்பதற்காக போலீஸ்காரர்களாக தங்களை அடையாளம் காட்டிக் கொண்டு, மக்களை அச்சுறுத்திய ஆசிய நாட்டைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பலை வடக்கு பாதுகாப்புத் துறை (North Security Department) கைது செய்துள்ளனர்.

அல் நஜ்மா (Al Najma) மற்றும் பழைய விமான நிலையம் பகுதிகளில், கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதாக திணைக்களத்திற்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கத்தாரி உடை (thobe) அணிந்து, குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து தங்களை போலீஸ்காரர்களாக காட்டிக்கொண்டு, மக்களை அச்சுறுத்தி பணம் பறிக்க முற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உரிய சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : The Peninsula Qatar.