கத்தாரில், குடும்ப குடியிருப்பு பகுதிகளில் 5 தொழிலாளர்களுக்கு மேல் தங்குவதற்கு தடை.!

Image Source : ilq.net

கத்தாரில், குடும்ப குடியிருப்பு பகுதியில் ஒரு தங்குமிடத்தில் 5 தொழிலாளர்களுக்கு மேல் தங்க வைப்பது சட்டத்தை மீறுவதாகும் என்று புதன்கிழமை அறிவிக்கப்பட்ட அமைச்சரவை முடிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை பின்பற்றாதவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், QR 50,000 முதல் 1,00,000 வரை அபராதமும் அல்லது இரண்டில் ஏதேனும் ஒரு தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும், 5க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்ப குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றுகூடுவதைக் கட்டுப்படுத்துவதற்கும் அமைச்சகத்தின் முயற்சிகளின் கட்டமைப்பிற்குள் இந்த முடிவு வருவதாக கூறப்பட்டுள்ளது.

Source: Gulf Times