வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் “வந்தே பாரத்” திட்டத்தின் மூன்றாம் கட்டமாக ஓமன் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளது.
ஓமன் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு 4 விமானங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதில், ஒரு விமானம் ஓமன் நாட்டிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வருகின்ற ஜூன் 29ஆம் தேதி இயக்கப்படவுள்ளதாக ஓமன் நாட்டிற்கான இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக செய்தி
வெளியிட்டுள்ளது. மீதமுள்ள மூன்று
விமானங்கள் இந்தியாவின் மற்ற
நகரங்களான டெல்லி, மும்பை மற்றும்
மங்களூர் செல்லும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
PRESS RELEASE: Additional flights under Vande Bharat Mission: Phase 3#IndiaFightsCorona #VandeBharatMission pic.twitter.com/S2UZQaCdfM
— India in Oman (Embassy of India, Muscat) (@Indemb_Muscat) June 22, 2020