கத்தாரில் தமிழர் பேரவை சார்பில், இந்திய குடியரசு தினவிழா நிகழ்வு..!

கத்தார் நாட்டில் (‌ஜனவரி 31) அன்று‌ ஒருங்கிணைந்த தமிழர் பேரவை சார்பில், இந்திய குடியரசு தின நிகழ்வை முன்னிட்டு, கத்தார் வாழ் தமிழர்கள் முன்னிலையில் கருத்தரங்கம் மற்றும் வளைகுடாவாழ் சமூக சேவையாளர்களை கௌரவபடுத்தும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

தமிழ் தாய் வாழ்த்துக்களுடன் துவங்கிய விழாவில், பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், கருத்துரைகள் மற்றும் கத்தார் வாழ் சமூக நலபணியாளர்களை கௌரவிப்பு நிகழ்ச்சி போன்றவைகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கத்தார் வாழ் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்‌, TVS குழும நிறுவனர் S.M.ஹைதர்அலி, தமிழக முன்னால் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பேத்தியும் கல்வி கடவுள் காமராஜ் டிரஸ்ட், நிறுவனர் T.S.K.மயூரி, கத்தார் ICBF தலைவர் பாபுராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், பள்ளி மாணவ மாணவியர்கள்  உட்பட பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.