கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் மீட்கும் “வந்தே பாரத்” திட்டத்தின் அடிப்படையில், கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கு இன்று (09-06-2020) 20வது விமானம் புறப்பட்டது.
கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு 175 பயணிகள் மற்றும் 3 குழந்தைகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX-1576 விமானம் சற்று முன் புறப்பட்டு சென்றது.
IX-1576 took off from HIA for Trivandrum a short while ago with 175 passengers and 3 infants. This was the 20th flight from Doha under #Vandebharat, bringing the total number of repatriated passengers to 3330, plus 90 infants. @DrSJaishankar @MOS_MEA @MEAIndia pic.twitter.com/ga0gsJrV70
— India in Qatar (@IndEmbDoha) June 9, 2020
கத்தாரிலிருந்து இதுவரை நாடு திரும்பிய மொத்த எண்ணிக்கை 90 குழந்தைகள் மற்றும் 3,330 நபர்களை கொண்டுள்ளதாக கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டில் கூறியுள்ளது.