கட்டாரா இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு மூடல்..!

Katara suspends all activities for two weeks.

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பரவும் வாய்ப்பைக் குறைக்க, கட்டாரா (Katara) அனைத்து நடவடிக்கைகளையும் இன்று முதல் (15-03-2020) இரண்டு வார காலத்திற்கு இடைநிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

கட்டாரா அனைத்து கண்காட்சி காட்சியகங்கள், உணவகங்கள் மற்றும் கட்டாரா கிளப் மற்றும் கடற்கரை ஆகியவை இன்று முதல் நிறுத்தப்படும் என‌ கூறியுள்ளது.

இதுகுறித்து கட்டாரா தனது ட்வீட்டர் பதிவில் கூறுகையில், தனது ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் குறைக்க கத்தார் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஏற்ப, கட்டாரா அதன் அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்தம் செய்துள்ளாதாக கூறியுள்ளது.