கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், கத்தாரில் இன்று (31-01-2021) முகக்கவசம் அணிய தவறிய 242 பேரை உள்துறை அமைச்சகம் (MoI) பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளது.
கத்தார் ஏர்வேஸ் விமானத்திற்கு தண்ணீர் பீச்சி அடித்து வரவேற்பு.!
கத்தாரில் இதுவரை முகக்கவசம் அணிய தவறியதற்காக 8,190 பேர் மற்றும் வாகனத்தில் நான்கு பேருக்கு மேல் சென்றதற்காக 277 நபர்களையும் அமைச்சகம் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
சைக்கிள் பாதையில் காரை ஓட்டிச்சென்ற நபர்; அதிரடி காட்டிய கத்தார் போலீஸ்..!
In line with the cabinet decision based on Law No. 17 of 1990 regarding infectious diseases, 242 people were referred to the Public Prosecution for non-compliance with wearing masks. #MoIQatar #YourSafetyIsMySafety #COVID19 #Qatar pic.twitter.com/NNLwYfuOZM
— Ministry of Interior (@MOI_QatarEn) January 31, 2021