கத்தாரில், கொரோனா வைரஸிலிருந்து மேலும் 54 நபர்கள் குணமடைந்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் (MoPH) இன்று (27-04-2020) அறிவித்துள்ளது.
தற்போது வரை குணமடைந்தவர்களின், மொத்த எண்ணிக்கை 1,066ஆக உள்ளது.
பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில், 3,420 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது.
மேலும், கத்தாரில் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பெயரில், இதுவரை 85,709 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.
கத்தாரில் வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்காக சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்புடனும், அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்குமாறு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.