கொரோனா வைரஸ்; கத்தாரில் மொத்த எண்ணிக்கை 12 ஆக உயர்வு..!

கத்தார் நாட்டில் புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் (MoPH) தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை பன்னிரெண்டாக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட நோயாளி சமீபத்தில் ஈரான் நாட்டில் இருந்து திரும்பிய கத்தார் குடிமகன். இவர் கத்தார் வந்தவுடன் உடனடி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார். மேலும், அவர் வந்ததிலிருந்து சமூக உறுப்பினர்களுடன் எந்த தொடர்பும் கொள்ளவில்லை என்றும், கத்தார் சமூகத்தில் நோய் வெடிக்கும் ஆபத்து இன்னும் குறைவாகவே உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நோயாளி முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு தொற்று நோய் மையத்தில் அனுமதிக்கப்பட்டு, நிலையான நிலையில் உள்ளார் என கூறப்பட்டுள்ளது.