கத்தாரில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் கீழ், ஹமாத் மருத்துவ நிறுவனம் (HMC) அதன் சில மருத்துவமனைகள் மற்றும் வசதிகளுக்கான பார்வையாளர் கொள்கையில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பின்படி, புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
- ஹாஸிம் மெபிரீக் பொது மருத்துவமனை, மெசாயிட் மருத்துவமனை, கியூபா மருத்துவமனை, அனைத்து ஏனைய வசதிகள் மற்றும் COVID-19 வசதிகள் என வகைப்படுத்தப்பட்ட அனைத்து பகுதிகளிலும் எந்த நேரத்திலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
- மற்ற அனைத்து மருத்துவமனைகளுக்கும், வருகை நேரம் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை என குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஒரு நேரத்தில் ஒரு பார்வையாளர் மட்டுமே அதிகபட்சம் 15 நிமிடங்களுக்கு அனுமதிக்கப்படுவார்.
- பார்வையாளர்கள் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கை சுகாதாரத்திற்கான அனைத்து மருத்துவமனை வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும்.
COVID-19 பரவுவதிலிருந்து நோயாளிகளைப் பாதுகாப்பதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று HMC குறிப்பிட்டுள்ளது.